Saturday, November 11, 2017

முன்னறிதல்



வெண்முரசில் ஒவ்வொருவருக்கும் வருவது முன்னரே தெரிவதைப்பற்றி ஒருவர் எழுதியிருந்தார். அது ஒரு கிளாஸிக் கற்பனை என்று எழுதியிருந்தார். எனக்கு வயது 80 தாண்டிவிட்டது. உண்மையில் என் வாழ்க்கையை நான் பார்க்கும்போது எல்லா முக்கியமான சம்பவங்களையும் நான் முன்னடியே உணர்ந்தேன் என்று தெரிகிறது. குறிப்பாக மரணங்கள் முன்னாடியே தெரிந்துவிடும். நாம் அதை உதாசீனம் செய்வோம். அறிவால் அதை மழுப்பிக்கொள்வோம். ஆனால் அது அங்கே இருந்துகொண்டே இருக்கும். அந்த முன்னுணர்வு மாயை இல்லை. அது ஒரு பிரபஞ்ச விஷயம். இங்கே நிகழ்பவை என்பவை பெரிய வலை போல. வலையின் எல்லா கண்ணிக்கும் தொடர்பு உள்ளது


ஆர்.எஸ்.மணியன்