Sunday, November 19, 2017

பண்டவர்களும் மைந்தர்களும்





அன்புள்ள ஜெ,


உபபாண்டவர்கள் பாண்டவர்களின் அதே குணங்களைக்கொண்டிருக்கிறார்கள். தருமனின் மைந்தர் தருமனைப்போலவே இருக்கிறார்கள். ஆனால் கூர்மையான வேறுபாட்டையும் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் மேலும் சிரிப்பும் கற்பனையும் நெகிழ்வும் உள்ளது. சொல்லாமலேயே இந்த வேறுபாட்டை உணர்த்தி எழுதுவது ஒரு அரிய கலை.

இது ஏன் என்பதை நான் கூர்ந்து வாசித்தேன். எனக்கு தோன்றியது இதுதான். பாண்டவர்கள் அடைந்த துன்பம் அவமதிப்பு மோசடியாக நிலம் பிடுங்கப்பட்டது எதையுமே உபபாண்டவர்க்ள் பொருட்படுத்தவே இல்லை. அவர்களைப்பொறுத்தவரை அதெல்லாமே முந்தைய தலைமுறையின் பழங்கதைகள். ஒன்பதுபேருக்குமே பழிவாங்கும் எண்ணம் ஏதும் இல்லை. அவர்கள் அதைப்பற்றி பேசிக்கொள்ளவே இல்லை.இதுதான் ஆச்சரியமானது. அவர்கள் மிகவும் மனவிடுதலையுடன் இருக்கிறார்கள். இந்த அம்சம்தான் அவர்களை வேறுபடுத்துகிறது

மனோகரன்


ட்த்