Wednesday, November 15, 2017

குலமுறை



அன்புள்ள ஜெ

வெண்முரசில் திரும்பத்திரும்ப வரும் ஒரு விஷயம் குலமுறை, குல அறம் ஆகியவை. ஒரு மூத்தவர் சொன்னால் அதைக் கடைப்பிடிக்கிறார்கள். மூத்தவருக்கு எந்நிலையிலும் மரியாதை செய்கிறார்கள். கடுமையாக மோதிக்கொள்கையில்கூட பொய் சொல்வதில்லை. குல எதிரியானாலும் குழந்தைகளைக் கொஞ்சுகிறார்கள். இன்றைக்கு இதெல்லாமே ஒருவகையான அரிய குணமாக உள்ளன. புனைவாகத்தான் தெரிகின்றன. ஆனால் நான் சின்னக்குழந்தையாக இருந்த காலகட்டத்தில் இது இருந்தது. ஜென்மவிரோதிகள்கூட சாவுக்கு ஒன்றாகச் சேர்வர்கள். விரோதிகளின் பிள்ளைகளை கொஞ்சுவார்கள். குலம்சேர்ந்து வாழும் வாழ்க்கையின் அம்சங்கள் இவை. இவையெல்லாமே இன்றைக்கு இல்லாமலாகிவிட்டன என நினைக்கிறேன்


வி.எஸ்.வாசன்