Thursday, December 7, 2017

நீலம் மீண்டும்



அன்புள்ள ஜெ

ஒவ்வொரு வெண்முரசு நாவல் முடிவிலும் நான் நீலம் நாவலை மீண்டும் எடுத்து வாசித்துப்பார்ப்பதுண்டு. இம்முறை அந்தத்தூண்டுதல் மிக ஆழமாக ஏற்பட்டது. அதற்குக்காரணம் சதானீகன் பார்ப்பது. அப்போது கண்ணன் முதிய வயதில் படுத்துக்கிடக்கிறான். ஆனால் வயதே இல்லாத உடல். சங்கும் தாமரையும். அந்த அற்புதமான வரலாற்றை இப்போது வாசித்தேன். அதன்பின் நீலத்தை. இப்போது வெண்முரசில் வந்துகொண்டே இருக்கும் கிருஷ்ணன் அந்த கோகுலத்துக் கண்ணன்தான் என்று நான் எனக்கே சொல்லிக்கொள்ளவேண்டியிருக்கிறது/ அது இந்நாவலை நான் சரியாகப்புரிந்துகொள்ள மிகமிக முக்கியமானதாக உள்ளது


சாரதி