Tuesday, January 16, 2018

நீலப்பட்டு



ஜெ,


திகைப்புடன் அவர் குழலில் சூடிய பீலியை நோக்கினாள். அதுவும் அவளுக்கு நோக்களிக்கவில்லை. படபடக்கும் உள்ளத்துடன் அவள் அவர் புன்னகையை, ஒற்றைக்கல்லாரம் துவண்ட மார்பை நோக்கினாள். பின்னர் காலடிகளுக்கு நோக்கு தழைந்தாள். அறிந்தவை, அணுக்கமானவை. அவள் உளக்கொந்தளிப்பு அடங்கியது. அவள் அவர் கால்களையே நோக்கிக்கொண்டிருந்தாள்.

மூன்று நாட்களாகியும் இந்த வரிகள் பரவசமாக நினைவில் நிற்கின்றன. மூவகை மனிதர்கள், மூவகை உணர்வு நிலைகள். மூன்றாகவும் நிற்கும் அவர். மொத்த வெண்முரசையும் “நீலப்" பட்டில் சுற்றிய வரிகள்


ஏ.விமணிகண்டன்