Tuesday, January 2, 2018

இரு தரப்பு



அன்புள்ள ஜெ

பாஞ்சாலி துகிலுரியப்பட்ட அந்நிகழ்ச்சியிலிருந்து அஸ்தினபுரியின் பெண்கள் எவரும் வெளிவரவே இல்லை. அவர்களெல்லாருமே அதனால் உணர்வுபூர்வமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அசலையும் காந்தாரியும் பானுமதியுமெல்லாம் பாஞாலி போலவே கோபம் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேவிகை அந்த அளவுக்குக் கோபம் கொள்ளாதவராகவே நீங்கள் காட்டுகிறீர்கள். இந்த அம்சம் மற்ற பெண்கள் விஷயத்திலும் தொடருமா என்று தெரியவில்லை. இது ஒரு முக்கிய்மமான அம்சம் என நினைக்கிறேன்


சுந்தரராஜன்