Thursday, February 1, 2018

முதல் கிருமி



அன்புள்ள ஜெ

முன்பு ஒருமுறை இதேபோல அஸ்தினபுரி நோயுற்ற காட்சிகளை மீண்டும் சென்று வாசித்தேன். அன்று கணிகர் நோயிலிருந்து மீண்டு ஆரோக்கியமாக ஆனார். அதுவே இப்போதும் நிகழ்கிறது.  அஸ்தினபுரியின் மீது விழுந்த நோயின் முதல் கிருமியே அவர்தான் என தோன்றுகிறது. ஒவ்வொன்றையும் அவர் வகுத்துச்செல்லும் விதத்தைப் பார்க்கும்போது ஒன்று தோன்றியது மனிதனின் பலவீனங்களை மட்டும் அறிந்தால்போதும். மனிதனைப்பற்றி வேறு ஒன்றுமே தெரிந்துகொள்ளத்தேவையில்லை


சாமிநாதன்