Saturday, February 17, 2018

கண்ணனின் வழி



இளைய யாதவர் புருஷமேத வேள்வியில் இருப்பார். இம்முறை சாந்தீபனி குருநிலையின் ஆசிரியராக வேள்வியின் சொல்லுசாவலில் பங்கெடுக்க வருகிறார். அவ்வேள்விக்கு தங்களை அழைத்துவரவேண்டும் என அவருடைய செய்தி எனக்கு வந்தது. அதன்பொருட்டே நான் வந்தேன் – என்று தாரை சொல்வது வரை என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. கதை எங்கோ சென்றுகொண்டிருக்கிறது என்று தோன்றியது. தாரை நேர்மையானவள். ஆகவே அவள் சொல்லிவிட்டாள். கிருஷ்ணன் கர்ணனை வேள்விச்சாலையில் நிறுத்தி ஏதோ முக்கியமான நாடகத்தை ஆடப்போகிறான் என நினைக்கிறேன்


ராஜசேகர்