Monday, February 5, 2018

ஷத்ரியர் அவை



அன்புள்ள ஜெ

ஷத்ரியர் அவை அவ்வாறு பிரம்மாண்டமாக ஏன் சொல்லப்படவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அத்தனை ஷத்ரியர்களையும் காட்டுவதற்காக இருக்கும் என நினைத்தேன். ஆனால் வாசித்துக்கொண்டிருக்கையில் அது ஒரு மனம் என்று தோன்றியது. அடுக்குகளாக அமைந்துள்லது. அதன் அடித்தளம் வழியாக எலிகளைப்போல மக்கள் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு மர்மமான உலகம் போலிருந்தது. வட்டவடிவமாக இருந்ததும் ஒருகாரணம் என நினைக்கிறேன். அந்த உலகத்துக்கு அடியில் பாதாளம். பாதாளம் எலிகளின் இருண்ட உலகம்தானே?


செல்வராஜ்