Tuesday, March 6, 2018

குணாகுணிபேத பங்கம்



குணாகுணிபேத பங்கம் என்பது ஒரு சொல்லுக்கும் அச்சொல் சுட்டும் பொருளுக்கும் வேறுபாடில்லை என்று சுருக்கமாகச் சொல்லலாம். அதாவது தீயும் தீ என்ற சொல்லும் சமம்தான். லா.ச.ரா தீ என்றால் வாய் சுடவேண்டும் என்று சொன்னது இதைவைத்துத்தான். அவருடைய பின்னணியில் இருந்து அவருக்குக் கிடைத்த வரி இது. [அந்தப்பின்னணி தெரியாமல் அதை புளகாங்கிதத்துடன் அணுகுவார்கள் சிலர்] குணாகுணிபேதபங்கம் தான் மீமாசத்தின் சுருதிவாதத்துக்கே அடிப்படை.


சாரங்கன்