Thursday, April 19, 2018

மானுட உளவியல்



ஜெ

இன்றைய அத்தியாயம் (இமைக்கணம் 26) ஒரு மிக முக்கியமான மானுட உளவியலை காட்டியது... காவியங்களிலும் கதைகளிலும் முழுமை அடைந்தோரை வாழ்த்துவோம் விதந்துவோம் ஆனால் நம் குருதி அதை அடையும் போது தாங்கொணா துயரே ஏற்படுகிறது. அவன் கீழான குடிகாரனாகவோ பெண் பித்தனாகவோ இன்னும் எந்த கீழ்மையிலும் உழன்று விட்டுப் போகட்டும் என் கண்முன்னே ரத்தமும் சதையுமாகவே இருக்க வேண்டும்... என் குருதியினனின் முழுமை எனக்கு என்ன பொருளை தரப்போகிறது? இது வியாசனுடையது மட்டுமல்ல ஒரு பொது உளவியல்.. வெண்முரசு எனக்கு மாபெரும் மனோதத்துவ நூல் 

சிவக்குமார்

சென்னை